Posts

Chilli Garlic Potato Bites | Snacks Recipes | Potato Recipes | Aloo Reci...

Image

EMIS - ஆசிரியர்கள் mobile number & e-mail id ஐ Emis-யில்update செய்வது எப்படி ? &ஆசிரியர்கள் கொரானா தடுப்பூசி செலுத்திய விவரங்களை emis-யில் பதிவு செய்வது எப்படி?

  🎴🎴🎴EMIS 🏮ஆசிரியர்கள் mobile number & e-mail id update செய்வது எப்படி ? 🏮ஆசிரியர்கள் கொரானா தடுப்பூசி செலுத்திய விவரங்களை emis-யில் பதிவு செய்வது எப்படி? 👇👇👇👇👇👇👇👇 https://youtu.be/Qx3anBGwszM

பொது அறிவு - விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி

Image
  தினம் ஒரு தகவல் விதையை இழந்ததால் விவசாயத்துக்கு நெருக்கடி விதை என்பது ஒரு உயிர்ப்பெட்டகம். மண்ணால் உயிர்ப்பெற்று வளரக்கூடியது. பஞ்சம் பாதித்த காலத்தில்கூட விதையை உண்ண மறுத்து, உயிர் துறந்தவர்கள் குறித்து நம் வரலாறு பதிவு செய்துள்ளது. அடுத்த தலைமுறைக்கு விதையை விட்டுச் செல்வதற்காக உயிர் நீத்த பரம்பரை நம்முடையது. இப்படி உயிரைத்துறந்து காப்பாற்றிய விதை களுக்கு எப்படி விலை நிர்ணயிக்க முடியும்? 10 ஆண்டுகளுக்கு முன்புவரை நம் ஊர் உழவர்கள் விளைவிக்கும் விதைக்கு விலை நிர்ணயிக்கப்படவில்லை. வியாபார பண்டமாக விதை இருக்கவில்லை. எல்லாவற்றையும் செழிப்புறச் செய்யும் வித் தையை கற்றிருந்த நம் பெண்களின் கைகளில் விதை பாதுகாக்கப் பட்டு, அடுத்தடுத்த பருவத்துக்காக சேமிக்கப்பட்டது. ஒருவருக்கு விதை தேவைப்பட்டால், அடுத்தவருக்கு பரிமாறிக் கொள்வதாக மட்டுமே அது இருந்தது. அப்படி இல்லாத நிலையில் ஒரு விதைக்கு மற்றொரு விதை பண்டமாற்றாகக் கொடுக்கப்பட்டது. பின்னாட்களில் விலை நிர்ண யிக்க வேண்டி வந்தபோதும்கூட, கொள்ளை லாப விலை நிர்ணயிக் கப்படாமல் நியாய விலையிலேயே விதை சந்தைப்படுத்தப்பட்டது. மேலை நாட்டின் நிறுவனங்கள் வி...
Image
  தினம் ஒரு தகவல் : தாவரங்களும் பேசுகின்றன...!   தாவரங்களுக்கு உணர்வும் அறிவும் இருக்கின்றன, என்கிறார் பரிணாமவியல் சூழலியலாளர் மோனிகா கக்லியானோ. தான் மேற்கொண்ட அறிவியல் சோதனைகளின் விளைவாகவும், அறிவியல் தரவுகளின் அடிப்படையிலும் இந்தக் கருத்து உருவானது என்றும், மூளையும் நரம்பு மண்டலமும் இல்லாவிட்டாலும், அறிவாற்றலை கொண்டு தாவரங்களால் செயல்பட முடியும் எனவும் அவர் கூறுகிறார் தாவரங்கள் பேசுவதை மனிதர்களால் கேட்க முடியுமா? சொற்களை பயன்படுத்தி பேசுவது என்ற மனித வழக்கத்தின்படி, அவை பேசுவதில்லை. ஆனால், அவை பேசுவதை கேட்க வேண்டுமென யாரேனும் விரும்பினால், அவை பேசும். தாவரங்களால் கட்டமைக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு இயற்கையிலேயே ஒத்திசைவு கொண்ட உயிரினங்கள் நாம். எனவே, ஏதாவது ஒரு வழியில் அவற்றுடன் நாம் தொடர்புகொள்ள வேண்டியது அவசியம். அப்போதுதான் நாம் எப்படி ஒருவரோடு மற்றொருவர் இணைந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இன்றைய சூழலியல் சீர்கேடுகளுக்கு முக்கிய காரணம், தாவரங்களுடன் கொண்டிருந்த உறவை நாம் மறுத்து வருவதுதான் காரணம். மனிதர்களுடன் உறவை ஏற்படுத்திக் கொள்வதைப் போன்றது தான் இதுவும்...

பொது அறிவு -

Image
 தினம் ஒரு தகவல் :  நேரம் இல்லாத உலகம் பொதுவாக, இயற்கை எனும் தத்துவக் கோட்பாடு, ஒரு செயலை மீண்டும், மீண்டும் செய்துகொண்டே தான் இருக்கிறது. உயிர்கள் பிறப்பதும், இறப்பதும், பின்பு மீண்டும் பிறப்பதும் நம் கோள்களின் சுழற்சி போல, கெடிகாரத்தின் சுழற்சி போல நிகழ்ந்து கொண்டேயிருக்கும் ஒரு செயல். இரவானால் உறங்க வேண்டும், பகலில் எழ வேண்டும், உணவு உண்ண வேண்டும், பின்பு மீண்டும் உறங்க வேண்டும் என்பவை நம் ஜீன்களில் பதிந்துபோன ஒரு விஷயம். ஆதி மனிதர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உண்டு, குறிப்பிட்ட நேரத்தில் கழிவுகளை கழித்தும் வாழ தொடங்கும்போது, அவர்களின் உடலும் அதற்குப் பழகிப் போகிறது. உதாரணமாக, சூரியன் உச்சியில் இருக்கும் போது உணவு உண்கிறார்கள் என்றால், அதை மீண்டும் மீண்டும் செய்ய தொடங்க, மறுநாள் சூரியன் உச்சிக்கு வரும் முன்பே வேட்டைக்குச் சென்றுவிட வேண்டும் என்று அவர்களுக்கு தோன்றும். இந்த சூரியன் உச்சியில் இருக்கும்போது நாம் உணவு உண்டுவிட வேண்டும் என்று அவன் முதன் முதலில் நினைத்தபோதே, அவன் நேரம் என்ற கோட்பாட்டை அவனுக்கு தெரியாமலே உருவாக்கிவிட்டான். பகலானால் வேட்டை, இரவானால் உறக்கம் என்பது...
Image